• Apr 27 2024

இலங்கை சிறையில் திடீரென உயிரிழந்த பாகிஸ்தான் பிரஜை..! samugammedia

Chithra / Jul 7th 2023, 7:56 pm
image

Advertisement

அங்குனுகொலபெலஸ சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட நிலையில் சிறையில் வைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

59 வயதான மொஹமட் நதீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என்பதுடன், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் 2019 ஆகஸ்ட்டில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை சிறையில் திடீரென உயிரிழந்த பாகிஸ்தான் பிரஜை. samugammedia அங்குனுகொலபெலஸ சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட நிலையில் சிறையில் வைக்கப்பட்டார்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.59 வயதான மொஹமட் நதீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என்பதுடன், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் 2019 ஆகஸ்ட்டில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement