கோமாளிகளின் கூடாரமாக பாராளுமன்றம் மாறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறியுள்ளதுடன் இலங்கையில் தற்பொழுது அதிகமானவர்கள் ஒருவேளை உணவையே உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிலும் சிலர் ஒருவேளை உணவை கூட உண்ண முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு இலங்கையின்
பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்நிலை தொடருமாயின் சோமாலியாவை விட எமது நாடு
படு பாதாளத்தில் சென்றடையும் எனவும் தெரிவித்தார்.
தற்பொழுது கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார், நாட்டில் ஏற்பட்டுள்ள மீன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காகவும்
வைத்தியசாலைகளின் தேவைகளுக்காக மீன் இனங்களை இறக்குமதி செய்வதாகவும். இப்படி
இறக்குமதி செய்தால் ஏற்கனவே எமது பகுதியில் உள்ள மீனவர்கள் ஆழ்கடலில்
மீன் பிடிக்க முடியாத நிலையிலும் கரையோரங்களில் மீன் பாடு இல்லாமலும் தமது
வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்த வரும் நிலையில்
தற்பொழுது கடல்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இப்படியான விடையங்களை
கூறுவது ஏற்கமுடியாது.
முன்னர் கூறினார் கடல் தொழிலாளர்களுக்கு அட்டை பண்ணை
மூலம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவும் கடலட்டை
பண்ணையும் இல்லை, வாழ்வாதாரமும் இல்லை கடற்றொழில் அமைச்சர் ஒரு தமிழனாக
இருந்து கொண்டே தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முடியாத அமைச்சராக உள்ளார்.
அயல்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகளின் பிரச்சனையை தீர்க்க முடியாத
அமைச்சர், ரோலர் படகை இரும்பு படகு மூலம் இடிப்போம் என்று கூறியவர்
தற்பொழுது சீனாவிடம் சென்று மண்டியிட்டு மீன் இறக்குமதி
செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலை தொடருமாயின் இனிவரும் காலங்களில்
இறக்குமதி செய்யப்படுகின்ற மீன் இனங்களையே நாங்கள் உண்ண வேண்டிய நிலை
ஏற்படும் எனவும் மீனவர்களின் வாழ்வாதாரமும் இல்லாமல் அழிக்கப்படும் என
தெரிவித்தார்.
கோமாளிகளின் கூடாரமாக மாறியுள்ள பாராளுமன்றம். நாடு படு பாதாளத்தில் விழும். சிறீதரன் எம்.பி. samugammedia கோமாளிகளின் கூடாரமாக பாராளுமன்றம் மாறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.கிளிநொச்சியில் இன்று(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறியுள்ளதுடன் இலங்கையில் தற்பொழுது அதிகமானவர்கள் ஒருவேளை உணவையே உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் சிலர் ஒருவேளை உணவை கூட உண்ண முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.அந்த அளவிற்கு இலங்கையின்
பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலை தொடருமாயின் சோமாலியாவை விட எமது நாடு
படு பாதாளத்தில் சென்றடையும் எனவும் தெரிவித்தார்.தற்பொழுது கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார், நாட்டில் ஏற்பட்டுள்ள மீன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காகவும்
வைத்தியசாலைகளின் தேவைகளுக்காக மீன் இனங்களை இறக்குமதி செய்வதாகவும். இப்படி
இறக்குமதி செய்தால் ஏற்கனவே எமது பகுதியில் உள்ள மீனவர்கள் ஆழ்கடலில்
மீன் பிடிக்க முடியாத நிலையிலும் கரையோரங்களில் மீன் பாடு இல்லாமலும் தமது
வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்த வரும் நிலையில்
தற்பொழுது கடல்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இப்படியான விடையங்களை
கூறுவது ஏற்கமுடியாது. முன்னர் கூறினார் கடல் தொழிலாளர்களுக்கு அட்டை பண்ணை
மூலம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவும் கடலட்டை
பண்ணையும் இல்லை, வாழ்வாதாரமும் இல்லை கடற்றொழில் அமைச்சர் ஒரு தமிழனாக
இருந்து கொண்டே தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முடியாத அமைச்சராக உள்ளார்.அயல்நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகளின் பிரச்சனையை தீர்க்க முடியாத
அமைச்சர், ரோலர் படகை இரும்பு படகு மூலம் இடிப்போம் என்று கூறியவர்
தற்பொழுது சீனாவிடம் சென்று மண்டியிட்டு மீன் இறக்குமதி
செய்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலை தொடருமாயின் இனிவரும் காலங்களில்
இறக்குமதி செய்யப்படுகின்ற மீன் இனங்களையே நாங்கள் உண்ண வேண்டிய நிலை
ஏற்படும் எனவும் மீனவர்களின் வாழ்வாதாரமும் இல்லாமல் அழிக்கப்படும் என
தெரிவித்தார்.