ஐக்கிய மக்கள் சக்தி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
குறித்த வேட்புமனுவை தாக்கல் செய்தன் பின்னர் உமாச்சந்திரா பிரகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் மக்கள் கூட்டணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று காலை 9.30 மணியளவில் கட்சியின் மத்திய குழு உறுபினர் தனபாலசிங்கம் சுதாகரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது, கரைச்சி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கையளித்ததாக தனபாலசிங்கம் சுதாகரன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
-
சமத்துவ கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் கையளிக்கப்பட்டது.
இதன்போது, முருகேசு சந்திரகுமார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.
கிளிநொச்சியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.இன்று (சனிக்கிழமை) உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.குறித்த வேட்புமனுவை தாக்கல் செய்தன் பின்னர் உமாச்சந்திரா பிரகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.-தமிழ் மக்கள் கூட்டணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று காலை 9.30 மணியளவில் கட்சியின் மத்திய குழு உறுபினர் தனபாலசிங்கம் சுதாகரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.இதன் போது, கரைச்சி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் கையளித்ததாக தனபாலசிங்கம் சுதாகரன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.-சமத்துவ கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் கையளிக்கப்பட்டது.இதன்போது, முருகேசு சந்திரகுமார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.