• Apr 28 2024

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விவகாரம்; குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை..! samugammedia

Chithra / May 24th 2023, 3:13 pm
image

Advertisement

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குறித்த போதகருக்கு எதிராக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.


போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விவகாரம்; குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை. samugammedia போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதனபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாயச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குறித்த போதகருக்கு எதிராக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.மேலும் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement