இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டின் நேற்று (03) வரையான காலப் பகுதியில் 200,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட 200,026 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ளதாக SLBFE குறிப்பிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகளவான வெளியேறல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆண்டில் மொத்தம் 311,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
இந்த வருடமும் 300,000 பேர் வெளிநாட்டு வேலைக்காக செல்வார்கள் என்று SLBFE மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.