கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு இனம் தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதுடன், வீட்டின் கதவு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் சேதப்படுத்தி நாசமாக்கியுள்ளனர்.
குறித்த வீட்டில் நேற்றைய தினம் பகல்வேளை உறவினர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும் அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்தோடு சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் களவாடி சென்றுள்ளனர் .
இச்சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துவிட்டு திரும்பி வரும் வழியில், வீட்டு உரிமையாளர் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவையாறு பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் மீது பெற்ரோல் குண்டு வீச்சு - முறைப்பாடளித்த உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல். கிளிநொச்சியில் பரபரப்புச் சம்பவம் samugammedia கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு இனம் தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதுடன், வீட்டின் கதவு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் சேதப்படுத்தி நாசமாக்கியுள்ளனர். குறித்த வீட்டில் நேற்றைய தினம் பகல்வேளை உறவினர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும் அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.அத்தோடு சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் களவாடி சென்றுள்ளனர் .இச்சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துவிட்டு திரும்பி வரும் வழியில், வீட்டு உரிமையாளர் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதையடுத்து திருவையாறு பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.