• May 02 2024

பணத்துக்காக புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான்...! கோட்டபாயவின் வெற்றிக்கும் உதவி...!ஹிருணிகா குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Sep 9th 2023, 9:43 am
image

Advertisement

பணத்துக்காக புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான்,தற்போது இந்தப் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என்ன? என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்களை பிள்ளையானின் வலதுகையாக இருந்தவரே வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட நியாயமான காரணம் உள்ளது. பிள்ளையான் பிரபாகரனுடன் இருந்தவர். அந்த அமைப்புடன் இணைந்து செயற்பட்டுவிட்டு, தனது தனிப்பட்ட தேவைகளுக்காக அந்த அமைப்பை காட்டிக் கொடுத்தவர்.

பிள்ளையானின் இந்தச் செயல், எமக்கு (சிங்கள மக்களுக்கு) வீரச் செயலாகத் தெரியலாம். பணத்துக்காக உளவுத் தகவல்கள். உபாயங்களை அரசுக்கு வழங்கினார். ஒன்றாக இருந்த தனது தலைவரையே காட்டிக்கொடுத்த பிள்ளையான் எம்முடன் இணைந்ததால் அவரின் இந்த நடத்தை மாறுமா? பிள்ளையானுக்கு வலதுகரமாக இருந்தவர்தான் தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பிள்ளையான் சிறையில் இருக்கும்போது, முஸ்லிம் அடிப்படைவாதிகளைச் சந்தித்துஇ கோத்தாபயவை வெற்றி பெற வைப்பதற்காகத் திட்டத்தைத் தீட்டினார் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

பணத்துக்காக புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான். கோட்டபாயவின் வெற்றிக்கும் உதவி.ஹிருணிகா குற்றச்சாட்டு.samugammedia பணத்துக்காக புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான்,தற்போது இந்தப் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்களை பிள்ளையானின் வலதுகையாக இருந்தவரே வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட நியாயமான காரணம் உள்ளது. பிள்ளையான் பிரபாகரனுடன் இருந்தவர். அந்த அமைப்புடன் இணைந்து செயற்பட்டுவிட்டு, தனது தனிப்பட்ட தேவைகளுக்காக அந்த அமைப்பை காட்டிக் கொடுத்தவர். பிள்ளையானின் இந்தச் செயல், எமக்கு (சிங்கள மக்களுக்கு) வீரச் செயலாகத் தெரியலாம். பணத்துக்காக உளவுத் தகவல்கள். உபாயங்களை அரசுக்கு வழங்கினார். ஒன்றாக இருந்த தனது தலைவரையே காட்டிக்கொடுத்த பிள்ளையான் எம்முடன் இணைந்ததால் அவரின் இந்த நடத்தை மாறுமா பிள்ளையானுக்கு வலதுகரமாக இருந்தவர்தான் தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளார். பிள்ளையான் சிறையில் இருக்கும்போது, முஸ்லிம் அடிப்படைவாதிகளைச் சந்தித்துஇ கோத்தாபயவை வெற்றி பெற வைப்பதற்காகத் திட்டத்தைத் தீட்டினார் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement