இன்று யாழ் நல்லூர் பகுதியில் 2மணியளவில் கடமையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் ஒருவரை நல்லூர் மாநகர சபைக்கு முன்பாக போக்கு வரத்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்
இது குறித்து முதலுதவி கண்காணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,,
முதியவர் ஒருவருக்கு உதவி செய்யும் நிமித்தம் தான் சென்றதாகவும் அப்போதே குறித்த பொலிஸ் அதிகாரி தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பொஸிசாருடைய இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக கண்டித்து இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்