• Jul 02 2024

கண்ணீர்புகை குண்டுகளை கொள்வனவு செய்ய முடியாது திண்டாடும் பொலிஸ் திணைக்களம்

Chithra / Dec 5th 2022, 7:04 am
image

Advertisement

இலங்கை பொலிஸ் திணைக்களம், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய முடியாது திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆண்டில் இலங்கை பொலிஸ் திணைக்களம் பயன்படுத்த தேவையான கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்ய போதியளவு டொலர்கள் கையிருப்பில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணீர்புகைக் குண்டு விநியோகஸ்தர்களுக்கு டொலர்களை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.


கண்ணீர் புகைக் குண்டு உள்ளிட்ட சில பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், ஏற்கனவே கையிருப்பில் உள்ள கண்ணீர்ப்புகைக் குண்டுகள் உள்ளிட்ட பொருட்களை சிக்கனமாக தொடர்ந்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணீர்புகை குண்டுகளை கொள்வனவு செய்ய முடியாது திண்டாடும் பொலிஸ் திணைக்களம் இலங்கை பொலிஸ் திணைக்களம், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய முடியாது திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் ஆண்டில் இலங்கை பொலிஸ் திணைக்களம் பயன்படுத்த தேவையான கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்ய போதியளவு டொலர்கள் கையிருப்பில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.கண்ணீர்புகைக் குண்டு விநியோகஸ்தர்களுக்கு டொலர்களை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.கண்ணீர் புகைக் குண்டு உள்ளிட்ட சில பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறெனினும், ஏற்கனவே கையிருப்பில் உள்ள கண்ணீர்ப்புகைக் குண்டுகள் உள்ளிட்ட பொருட்களை சிக்கனமாக தொடர்ந்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement