யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு சனி, ஞாயிறு தினங்களில் பொலிசாரின் பிரசனத்தை அதிகரிக்க யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.
சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.
குறித்த விடயத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
யாழில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு. எடுக்கப்பட்டது தீர்மானம் samugammedia யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு சனி, ஞாயிறு தினங்களில் பொலிசாரின் பிரசனத்தை அதிகரிக்க யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.குறித்த விடயத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.அத்தோடு கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.