நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் சமீபத்தில் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த வேளை மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், யாஷிகாவிடம் போலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வாக்குமூலத்தின் போது காரினை செலுத்தியது யாஷிகா என உறுதி செய்யப்பட்டதுடன், அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாத காரணத்தால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்கு மூலத்தில் தெரியவந்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மார்ச் 21 ஆம் திகதி செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் ஆஜராகாதமையால் 25 ஆம் திகதி ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அவர் தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல இளம் நடிகை.காரணம் இதுதான்samugammedia நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் சமீபத்தில் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இளம் நடிகையான யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த வேளை மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும், படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், யாஷிகாவிடம் போலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். வாக்குமூலத்தின் போது காரினை செலுத்தியது யாஷிகா என உறுதி செய்யப்பட்டதுடன், அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாத காரணத்தால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்கு மூலத்தில் தெரியவந்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மார்ச் 21 ஆம் திகதி செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் ஆஜராகாதமையால் 25 ஆம் திகதி ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.