• May 09 2024

பாடசாலைக்கு தந்தையை அழைத்து வரச் சொன்ன அதிபர் - விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவி! வெளியான காரணம் samugammedia

Chithra / Jul 6th 2023, 11:22 am
image

Advertisement

கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலுனிகாவெவ ஜனசிரிகம பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அனுர மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் தனது தந்தையின் கைத்தொலைபேசியை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து பாடசாலை அதிபர் கைத்தொலைபேசியை தன்னிடம் வைத்துக் கொண்டதுடன், மறுநாள் தந்தையுடன் பாடசாலைக்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த  விஷத்தை குடித்து உயிரை மாய்த்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்


பாடசாலைக்கு தந்தையை அழைத்து வரச் சொன்ன அதிபர் - விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த மாணவி வெளியான காரணம் samugammedia கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலுனிகாவெவ ஜனசிரிகம பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அனுர மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் தனது தந்தையின் கைத்தொலைபேசியை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.இதையடுத்து பாடசாலை அதிபர் கைத்தொலைபேசியை தன்னிடம் வைத்துக் கொண்டதுடன், மறுநாள் தந்தையுடன் பாடசாலைக்கு வருமாறு கூறியுள்ளார்.இதனால் மனவேதனையடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த  விஷத்தை குடித்து உயிரை மாய்த்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சிறுமி உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிறுமி உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement