• May 02 2024

யாழில் போதைக்கெதிரான விழிப்புணர்வு போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு!

Sharmi / Dec 19th 2022, 4:58 pm
image

Advertisement

அனைத்துலக தமிழர் மேம்பாட்டநிதியத்தின் ஏற்பாட்டில் போதைக்கெதிரான விழிப்புணர்வும் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குமான பரிசளிப்பு நிகழ்வு இன்று பி.ப 2.00 மணியளவில் கருகம்பனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்து கொண்டார். 

போதைப் பொருள் விழிப்புணர்வை  மையப்படுத்தி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான சித்திரம் வரைதல் , கட்டுரை எழுதுதல் மற்றும் சுலோகம்  எழுதுதல் போன்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகெண்டிருந்தனர்.



யாழில் போதைக்கெதிரான விழிப்புணர்வு போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு அனைத்துலக தமிழர் மேம்பாட்டநிதியத்தின் ஏற்பாட்டில் போதைக்கெதிரான விழிப்புணர்வும் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குமான பரிசளிப்பு நிகழ்வு இன்று பி.ப 2.00 மணியளவில் கருகம்பனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்து கொண்டார்.  போதைப் பொருள் விழிப்புணர்வை  மையப்படுத்தி பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான சித்திரம் வரைதல் , கட்டுரை எழுதுதல் மற்றும் சுலோகம்  எழுதுதல் போன்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகெண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement