முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏப்ரல் 21 தாக்குதல் நட்டஈடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றின் 7 நீதியரசர்கள் கொண்ட ஆயத்தினால்இ ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இருப்பினும், பிரதிவாதிகள் உரிய இழப்பீடுகளை வழங்காததால், பல மனுதாரர்கள் பின்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுவில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அதன்படிஇ குறித்த மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சிக்கல். நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள மைத்திரி.samugammedia முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏப்ரல் 21 தாக்குதல் நட்டஈடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி உயர் நீதிமன்றின் 7 நீதியரசர்கள் கொண்ட ஆயத்தினால்இ ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இருப்பினும், பிரதிவாதிகள் உரிய இழப்பீடுகளை வழங்காததால், பல மனுதாரர்கள் பின்னர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.குறித்த மனுவில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.அதன்படிஇ குறித்த மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமை குறிப்பிடத்தக்கது.