பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறையினால் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அமைப்பில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 11,293 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால், தற்போது 6,677 பேர் மாத்திரமே அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சாருதத்ய இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.