நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் நான்கு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த நாய்க்குட்டி மீட்கப்பட்டுள்ளது.
அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹடே மாகாணத்தில் இரத்த காயத்துடன் சிக்கித் தவித்த 'பாமுக்' என்ற நாய்க்குட்டியை, இடிபாடுகளை அகற்றி மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.