ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் குறிப்பாக யுகலிப்டஸ் காடுகளில் கூகாபுரா என்ற பறவை இனம் காணப்படுகின்றது. மீன் கொத்தி இனத்தைச் சேர்ந்த இந்த பறவை மீன் கொத்தி இனத்திலேயே மிகப் பெரியதாகும். நதிகளில் உள்ள மீன்களையும் சில சமயங்களில் சிறிய பாம்புகளைக் கூட உண்ணும் பழக்கம் இந்த பறவைக்கு இருக்கிறது.
இப்பறவை சூரியன் உதயமானவுடன் இந்த பறவை எழுப்பும் ஒலி, மனிதனின் சிரிப்பொலி போல இருப்பதால் இங்கு உள்ள பூர்வகுடி மக்கள் இதனை‘காட்டுவாசிகளின் மணி’என்று அழைக்கின்றனர்.