• Apr 28 2024

மக்களுடன் இணைந்து போராடவும் தயார் – சுதந்திரக் கட்சியின் அதிரடி அறிவிப்பு SamugamMedia

Chithra / Feb 15th 2023, 2:26 pm
image

Advertisement

தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கட்சி என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் அக்கட்சி நடத்தும் தொடர் பேரணிகள் ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தொடர் போராட்டமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், ஜனநாயக வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பதற்காக மக்களுடன் இணைந்து போராடவும் தயங்கப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுடன் இணைந்து போராடவும் தயார் – சுதந்திரக் கட்சியின் அதிரடி அறிவிப்பு SamugamMedia தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கட்சி என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் அக்கட்சி நடத்தும் தொடர் பேரணிகள் ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தொடர் போராட்டமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், ஜனநாயக வாக்களிக்கும் உரிமையை வென்றெடுப்பதற்காக மக்களுடன் இணைந்து போராடவும் தயங்கப் போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement