எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து பயணிக்க தீர்மானித்திருந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான சஜித்தின் நிலைப்பாட்டுடன் உடன்படுவதற்கு தாம் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள நிலையில் வாசுதேவ நாணயக்கார ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி சபையில் இதனை குறிப்பிட்டிருந்தார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது தலைமையிலான கட்சி சர்வதேச நாணயநிதியத்தின் உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்காது என்றும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியிருந்தார்.