வாகன பரிமாற்ற படிவத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கையை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பாதியாக குறைக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
படிவத்தின் விபரங்களில் சிக்கலான தன்மை மற்றும் கடதாசியின் விலையை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதுள்ள 13 பக்கங்கள் ஜனவரி முதல் 6 பக்கங்களாக குறைக்கப்படவுள்ளன.