சமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரமாக களமிறங்கியுள்ல நியூலையில் உக்ரைனை சேர்ந்த 155 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய இராணுவ ஊடகப் பேச்சாளர் வாடிம் அஸ்டாபியேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரான கிரிவ்யிரி மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம் மீது டிரோன் தாக்குதல் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களாலேயே உக்ரைனை சேர்ந்த 155 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும் உக்ரைன் தரப்பில் இது குறித்து எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.