• May 18 2024

யானையும் காக்கையும் மொட்டும் இணைந்து சதி: சஜித்தின் புதிய கதை SamugamMedia

Chithra / Mar 13th 2023, 8:14 am
image

Advertisement


நாட்டை அழித்து, மக்களின் வாழ்வை சீரழித்து மக்களை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற முன்னாள் அரசாங்கத்திற்கும், தற்போதைய அரசாங்கத்திற்கும் தேர்தல் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சம் எழுந்துள்ளது எனவும் அவர்களால் மக்களிடம் செல்ல முடியாததாலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே யானை காக்கை மொட்டு தரப்புகள் மூன்றும் தேர்தலை ஒத்திவைக்கும் சதியில் ஈடுபட்டு வருகின்றன என  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணம் இல்லை என்று கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் மக்கள் தரப்பில் பெரும் உத்தரவு பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்க வேண்டுமென இடைக்காலத் தீர்ப்பு வழங்கினாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக இந்த அரசாங்கம் தவறான வாதத்தை உருவாக்கி அதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சிறப்புரிமைக் குழுவுக்குக் அழைத்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பக்கச்சார்பற்ற நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில்  செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

யானையும் காக்கையும் மொட்டும் இணைந்து சதி: சஜித்தின் புதிய கதை SamugamMedia நாட்டை அழித்து, மக்களின் வாழ்வை சீரழித்து மக்களை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற முன்னாள் அரசாங்கத்திற்கும், தற்போதைய அரசாங்கத்திற்கும் தேர்தல் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சம் எழுந்துள்ளது எனவும் அவர்களால் மக்களிடம் செல்ல முடியாததாலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதன் காரணமாகவே யானை காக்கை மொட்டு தரப்புகள் மூன்றும் தேர்தலை ஒத்திவைக்கும் சதியில் ஈடுபட்டு வருகின்றன என  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணம் இல்லை என்று கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றம் மக்கள் தரப்பில் பெரும் உத்தரவு பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்க வேண்டுமென இடைக்காலத் தீர்ப்பு வழங்கினாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக இந்த அரசாங்கம் தவறான வாதத்தை உருவாக்கி அதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சிறப்புரிமைக் குழுவுக்குக் அழைத்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பக்கச்சார்பற்ற நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில்  செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement