திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப்பீன் வேண்டுகோளுக்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர் கட்சித் தலைவருமான சஜீத் பிரேமதாஷா வினால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நாளை வியாழக்கிழமை (22) வைத்திய உபரணம் வழங்கி வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் "சுவாசம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 3.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான dialysis machine இதன்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் இதில் எதிர் கட்சித் தலைவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப் தெரிவித்தார்.