அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் 2,238 கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு கிராம அலுவலர் பரீட்சைக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சைகளை டிசம்பர் 02 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.