ரயில் தடம் புரண்டதால், கடலோரப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து வந்த சமுத்திராதேவி ரயில் இன்று (23) காலை களுத்துறை நிலையத்தில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையை வந்தடைய வேண்டிய இரண்டு புகையிரதங்கள் காலதாமதமாக செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.