• May 02 2024

பொலிஸார் மீது கொலைவெறித் தாக்குதல்: பாடசாலை மாணவன் கைது! மன்னாரில் சம்பவம்

Chithra / Apr 12th 2024, 8:31 am
image

Advertisement

 

 மன்னாரில் குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது சிறுவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவமானது மன்னார் - கரிசல் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. 

குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார்நிலையில் இருந்த நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கூரிய வாள், மூன்று கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனையடுத்து, 40 வயதான சந்தேக நபரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தர்ப்பத்தில் 17 வயது சிறுவனொருவர் கூரிய கத்தியால் விசேட அதிரடிப்படையினர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன் போது  விசேட அதிர அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் எனவும் தெரியவந்துள்ளது. 

பொலிஸார் மீது கொலைவெறித் தாக்குதல்: பாடசாலை மாணவன் கைது மன்னாரில் சம்பவம்   மன்னாரில் குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது சிறுவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது மன்னார் - கரிசல் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார்நிலையில் இருந்த நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பொன்றை நடத்தியுள்ளனர்.இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கூரிய வாள், மூன்று கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.அதனையடுத்து, 40 வயதான சந்தேக நபரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் 17 வயது சிறுவனொருவர் கூரிய கத்தியால் விசேட அதிரடிப்படையினர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது  விசேட அதிர அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் எனவும் தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement