ஏறாவூரில் பாடசாலை மாணவனொருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர், புன்னக்குடா கடற்கரையில் நேற்று (28) மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
ஐயன்கேணி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை காணாமல் போன குறித்த மாணவனை கண்டுபிடிக்க மீனவர்கள், கிராம மக்கள் கடும் சிரமத்தின் மத்தியில் தேடல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.