கிளிநொச்சியில் வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனிடம் போனை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இந்த சம்பவம் கிளிநொச்சி - உதயநகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை நம்மில் பலரும் வீதியில் செல்லும்போது அருகே செல்பவர்களை கவனிக்காது சமூக வலைத்தளங்களில் மூழ்கிப்பொவது வழமை.
இவ்வாறான செயல்கள் இதற்கு அண்மையிலும் கிளிநொச்சியில் வீதியில் நான்கு வழிப்பறிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
எனவே வெளியே செல்கையில் கூடுமானவரை வீதியில் செல்லும்போது தேவையற்று மொபைலை நோண்டுவதை தவிர்த்துகொண்டால் ஆபத்துக்களையும் , திருட்டுக்களையும் தவிர்க்கலாம்.