ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சபையில் உரையாற்றும் போது சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தொடர்ந்தும் பேசுகையில், விவாதத்திற்கு நேரம் இல்லை என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அவரது ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு அடுத்த ஆளும் கட்சி உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
எனினும் எஸ்.எம்.மரிக்கார் தொடர்ந்தும் உரத்த தொனியில் உரையாற்ற மறுப்பு தெரிவித்தமைக்கு எதிராக குரல் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் எவ்வளவு கூச்சல் போட்டாலும் நாங்கள் அடிபணிய போவதில்லை என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.