சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வினை வழங்கமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் இன்றைய தினம் முன்றாவது நாளாக முல்லைத்தீவில் அமைந்துள்ள, பண்டாரவன்னியன் சிலையிலிருந்து ஆரம்பமாகி பேரணியாக முல்லைத்தீவு அலம்பல் சந்தியினை சென்றடைந்து குருந்தூர் மலை ஆக்கிரமிப்பினை எதிர்த்தும் தொடர்சியாக அலம்பில் துயிலுமில்லத்திலும் நினைவேந்தலை மேற்கொண்டு பேரணியாக நீராவியடியை சென்றடைந்தது.
இதன் பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையில் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு பொதுசன வாக்கெடுப்பே இறுதி தீர்வு என்றும் சுதந்திரமா அல்லது மாகாண சபை முறைமையா என்பதை புலம்பெயர் தமிழர்களும் வாக்களிக்ககூடிய வகையில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென சர்வதேசத்திடம் கோரிநிற்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வினை வழங்காது - சிவாஜிலிங்கம் திட்டவட்டம். சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வினை வழங்கமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் இன்றைய தினம் முன்றாவது நாளாக முல்லைத்தீவில் அமைந்துள்ள, பண்டாரவன்னியன் சிலையிலிருந்து ஆரம்பமாகி பேரணியாக முல்லைத்தீவு அலம்பல் சந்தியினை சென்றடைந்து குருந்தூர் மலை ஆக்கிரமிப்பினை எதிர்த்தும் தொடர்சியாக அலம்பில் துயிலுமில்லத்திலும் நினைவேந்தலை மேற்கொண்டு பேரணியாக நீராவியடியை சென்றடைந்தது.இதன் பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இலங்கையில் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு பொதுசன வாக்கெடுப்பே இறுதி தீர்வு என்றும் சுதந்திரமா அல்லது மாகாண சபை முறைமையா என்பதை புலம்பெயர் தமிழர்களும் வாக்களிக்ககூடிய வகையில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென சர்வதேசத்திடம் கோரிநிற்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்