மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளையும் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்க மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம் முடிந்து திரும்பும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து சந்திவெளியில் பொலிசாரால் இடைமறிக்கப்பட்டு, மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும் கிழக்கு பல்கலைக்கழக மாணாவர்கள் 2 பேரும் கைது செய்யப்ட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அறுவர் கைது மட்டக்களப்பில் பதற்றம். samugammedia மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளையும் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்க மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் முடிந்து திரும்பும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து சந்திவெளியில் பொலிசாரால் இடைமறிக்கப்பட்டு, மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும் கிழக்கு பல்கலைக்கழக மாணாவர்கள் 2 பேரும் கைது செய்யப்ட்டுள்ளனர்.