ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை தாம் எதிர்ப்பதாக அறிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் ஆகிய இரண்டையும் தற்பொழுது கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
ஊடகவியலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைதுசெய்யும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. எனவே இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
ஊடகங்களை ஒடுக்குவதே அரசாங்கத்தின் பிரதான செயற்பாடாக மாறியுள்ளது. மக்களை எதிர்கொள்ள முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்
ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு சுதந்திர கட்சி எதிர்ப்பு samugammedia ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை தாம் எதிர்ப்பதாக அறிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் ஆகிய இரண்டையும் தற்பொழுது கொண்டுவர முயற்சிக்கின்றனர்.ஊடகவியலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைதுசெய்யும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. எனவே இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.ஊடகங்களை ஒடுக்குவதே அரசாங்கத்தின் பிரதான செயற்பாடாக மாறியுள்ளது. மக்களை எதிர்கொள்ள முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்