இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள களமிறங்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்ற இரா.சம்பந்தன், அடுத்த தீபாவளிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி இன்றுடன் ஏழுஆண்டுகள் கடந்துள்ளன.
எனினும் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று நிறைவேற்று அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் இன்றுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக யாழிலிருந்து வெளியாகும் வாராந்த மின்னிதழ் ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளது.