நாட்டின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அதன் பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு நிச்சயம் தீர்வு ஏற்படுத்தப்படும்
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நிச்சயம் நடக்கும். இதில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார்.
அவர் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் அல்லது பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவே நிச்சயம் வெற்றி பெறுவார்.அவர் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
ரணில் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே தமிழர்களுக்கு தீர்வு.வியூகம் வகுக்கும் ஐ.தே.க.samugammedia நாட்டின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அதன் பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு நிச்சயம் தீர்வு ஏற்படுத்தப்படும் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நிச்சயம் நடக்கும். இதில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார்.அவர் எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் அல்லது பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவே நிச்சயம் வெற்றி பெறுவார்.அவர் வெற்றி பெற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.