பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (08) பிற்பகல் கணவன் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பெண் மருமகனால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த பெண் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் வசித்து வந்த 59 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் கணவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மாமியாரை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகன் - இலங்கையில் கொடூரம் samugammedia பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.நேற்று (08) பிற்பகல் கணவன் மற்றும் மருமகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பெண் மருமகனால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலில் காயமடைந்த பெண் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில் வசித்து வந்த 59 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பெண்ணின் கணவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.