• May 18 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம்..!

Chithra / Apr 8th 2024, 11:03 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

இதில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள சுத்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடந்த 4ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால், அவசர அரசியல் குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜேலால் டி சில்வா தவிர்ந்த ஏனைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களை கூட்டத்திற்கு அழைக்குமாறும் அதில் கோரப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அந்தக் கடிதத்திற்கு பதிலளித்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை உத்தரவு இதுவரை கிடைக்கப்பெறாததால் அதனை முன்னெடுப்பது சாத்தியமற்றது என தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.இதில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள சுத்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடந்த 4ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால், அவசர அரசியல் குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜேலால் டி சில்வா தவிர்ந்த ஏனைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களை கூட்டத்திற்கு அழைக்குமாறும் அதில் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தக் கடிதத்திற்கு பதிலளித்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை உத்தரவு இதுவரை கிடைக்கப்பெறாததால் அதனை முன்னெடுப்பது சாத்தியமற்றது என தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement