• May 04 2024

உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை..! samugammedia

Chithra / Jun 12th 2023, 12:48 pm
image

Advertisement

ஒரு வருடத்தில் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.

யானை – மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, இலங்கை வரலாற்றில் யானை – மனித மோதலினால் அதிகளவான யானைகள் மற்றும் மனிதர்களின் உயிர்கள் பலியாகிய ஆண்டாக 2022 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

அதன்படி, 2022ம் ஆண்டு இலங்கையில் பலியாகிய யானைகளின் எண்ணிக்கை 439 மற்றும் மனித உயிரிழப்புக்கள் 148 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், இந்த வருடம் ஜூன் 2ம் திகதி வரைக்கும் யானைகளது மரணம் 193 ஆகவும் மனித உயிரிழப்புக்கள் 63 ஆகவும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானைகள் தொல்லையால், சிலர் இரவு நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் மரங்களில் மிகவும் ஆபத்தான முறையில் தங்குகின்றனர்.

யானை – மனித மோதலை தீர்க்க 2023 ஆண்டு யானைகளுக்கான வேலிக்கு 350 மில்லியன் ரூபாவும், யானை வெடிகளுக்காக 180 மில்லியன் ரூபாவும் உயிர் உடமை நட்டஈடாக 120 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

யானை – மனித மோதலை தீர்க்க 64 ஆண்டுகளாக பலகோடி ரூபாய் செலவழித்தும் இதுவரை மனிதர்கள் மற்றும் யானைகள் உயிரிழப்பைக் குறைக்க முடியாமல் போனது ஏன் என்பது புதிராகவே உள்ளது.


உலகிலேயே அதிக யானைகள் உயிரிழக்கும் நாடாக இலங்கை. samugammedia ஒரு வருடத்தில் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.யானை – மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, இலங்கை வரலாற்றில் யானை – மனித மோதலினால் அதிகளவான யானைகள் மற்றும் மனிதர்களின் உயிர்கள் பலியாகிய ஆண்டாக 2022 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.அதன்படி, 2022ம் ஆண்டு இலங்கையில் பலியாகிய யானைகளின் எண்ணிக்கை 439 மற்றும் மனித உயிரிழப்புக்கள் 148 ஆகவும் பதிவாகியுள்ளது.மேலும், இந்த வருடம் ஜூன் 2ம் திகதி வரைக்கும் யானைகளது மரணம் 193 ஆகவும் மனித உயிரிழப்புக்கள் 63 ஆகவும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.யானைகள் தொல்லையால், சிலர் இரவு நேரங்களில் தங்கள் குழந்தைகளுடன் மரங்களில் மிகவும் ஆபத்தான முறையில் தங்குகின்றனர்.யானை – மனித மோதலை தீர்க்க 2023 ஆண்டு யானைகளுக்கான வேலிக்கு 350 மில்லியன் ரூபாவும், யானை வெடிகளுக்காக 180 மில்லியன் ரூபாவும் உயிர் உடமை நட்டஈடாக 120 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.யானை – மனித மோதலை தீர்க்க 64 ஆண்டுகளாக பலகோடி ரூபாய் செலவழித்தும் இதுவரை மனிதர்கள் மற்றும் யானைகள் உயிரிழப்பைக் குறைக்க முடியாமல் போனது ஏன் என்பது புதிராகவே உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement