கனடாவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்டம், அனிஞ்சியன்குளம் மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான குலசிங்கம் கிருபாகரன் உயிரிழந்தார்.
வீதியில் திடீரென பாய்ந்து ஓடிய மான் ஒன்றின் மீது வாகனம் மோதி நிலை குலைந்தே விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
இவருடன் சென்ற மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். கோப்பாய் ரீச்சர் என மல்லாவியில் உள்ளவர்களால் அழைக்கப்படும் ஆசிரியையின் மகனான இவர் கனடாவிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகின்றது எனத் தெரியவருகின்றது.