• Feb 11 2025

இலங்கையில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்காக அரசின் புதிய திட்டம்

Chithra / Feb 11th 2025, 11:19 am
image

 

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்பட உள்ளன, மேலும் அதற்கான கடன் தொகை அரசு வங்கிகளால் வழங்கப்பட உள்ளது.

கடன் தொகையை திருப்பிச் செலுத்தக் கூடியவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்காக அரசின் புதிய திட்டம்  புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.எனினும் வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்பட உள்ளன, மேலும் அதற்கான கடன் தொகை அரசு வங்கிகளால் வழங்கப்பட உள்ளது.கடன் தொகையை திருப்பிச் செலுத்தக் கூடியவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement