• Sep 17 2024

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைந்த தெரு நாய்கள்; சுற்றுலாப் பயணிகள் அசௌகரியம்! samugammedia

Chithra / Apr 24th 2023, 2:30 pm
image

Advertisement

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று  காலை  தெருநாய்கள் சுற்றித் திரிந்ததமை அவதானிக்கப்பட்டுள்ளது.  

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அந்த நாய்கள் சிரமப்படுத்தும்  வகையில் நடந்துகொண்டிருந்தன.

இது குறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, விமான நிலைய முனைய கட்டிடத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் உள்ள விமான நிலைய வளாகத்தில் இந்த நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர்.

இந்த நாய்கள் எப்படியாவது விமான நிலைய ஓடுபாதையிலோ அல்லது விமானக் கட்டடத்திலோ நுழைந்தால், கடுமையான விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, கடந்த வருடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெருநாய்களை சுடுவதற்கு விசேட அதிகாரிகள் (டோக் ஷூட்டர்) நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைந்த தெரு நாய்கள்; சுற்றுலாப் பயணிகள் அசௌகரியம் samugammedia கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று  காலை  தெருநாய்கள் சுற்றித் திரிந்ததமை அவதானிக்கப்பட்டுள்ளது.  கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அந்த நாய்கள் சிரமப்படுத்தும்  வகையில் நடந்துகொண்டிருந்தன.இது குறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, விமான நிலைய முனைய கட்டிடத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் உள்ள விமான நிலைய வளாகத்தில் இந்த நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர்.இந்த நாய்கள் எப்படியாவது விமான நிலைய ஓடுபாதையிலோ அல்லது விமானக் கட்டடத்திலோ நுழைந்தால், கடுமையான விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வருடங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெருநாய்களை சுடுவதற்கு விசேட அதிகாரிகள் (டோக் ஷூட்டர்) நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement