அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையில் உக்ரேனில் அமைதிக்கான முயற்சிக்கு ஆதரவளிக்கச் சீனாவும் பிரான்சும் இணங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அது தொடர்பாகவும் இரு நாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோனுக்குப் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாகச் சீனா சென்று அங்கு சி சின்பிங்கை சந்தித்தார்.
அதிபர் சி சின்பிங் உடனான சந்திப்பின் நிறைவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரேனிய அணுமின் நிலையங்கள் மீதான ஆயுதத் தாக்குதலை எதிர்ப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இருவரும் நேற்றைய தினம் குவாங்சாவில் நட்பார்ந்த முறையில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
முன்னதாக, பெய்ச்சிங்கில் தலைவர்கள் இருவரும் சந்தித்திருந்ததுடன், அவர்கள் மீண்டும் சந்தித்துப் பேசியது ஓர் அரிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது.