• May 19 2024

கல்வியங்காட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி மரணத்தில் சந்தேகம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாயார் முறைப்பாடு samugammedia

Chithra / Aug 10th 2023, 6:54 am
image

Advertisement

யாழ். கல்வியன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் நீதி கோரியும் குறித்த்சிறுமியின்  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (9) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

கல்வியன்காடு பகுதியில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த  கேதீஸ்வரன் தர்மிகா என்ற 17 வயதுடைய சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த யூலைமாதம் 23 ஆம் திகதி சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.

சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்தமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த சிறுமியை வேலைக்கு அனுப்பிய தாயார், தற்போது தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நீதி தேவை எனக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

கல்வியங்காட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி மரணத்தில் சந்தேகம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாயார் முறைப்பாடு samugammedia யாழ். கல்வியன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் நீதி கோரியும் குறித்த்சிறுமியின்  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (9) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கல்வியன்காடு பகுதியில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த  கேதீஸ்வரன் தர்மிகா என்ற 17 வயதுடைய சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த யூலைமாதம் 23 ஆம் திகதி சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்தமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.குறித்த சிறுமியை வேலைக்கு அனுப்பிய தாயார், தற்போது தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நீதி தேவை எனக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement