• May 02 2024

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கான குழுவிற்கு தமிழர் நியமனம்!SamugamMedia

Sharmi / Mar 10th 2023, 3:16 pm
image

Advertisement

சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிசற்சங்க ரீதியான தீர்வுகளை காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய விசேட குழுவின் உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முகமாக கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க ரீதியான விடயங்களை கையாள மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் இரண்டாவது கூட்டம் கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

கலந்துரையாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட விசேட குழுவின் உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் சமன் ரத்னாயக்கவால் வழங்கப்பட்டது.



நாட்டின் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கான குழுவிற்கு தமிழர் நியமனம்SamugamMedia சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிசற்சங்க ரீதியான தீர்வுகளை காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய விசேட குழுவின் உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முகமாக கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க ரீதியான விடயங்களை கையாள மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் இரண்டாவது கூட்டம் கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.கலந்துரையாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட விசேட குழுவின் உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் சமன் ரத்னாயக்கவால் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement