தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது செஸ் மாஸ்டர் பிரனேஷ், இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.
காரைக்குடியைச் சேர்ந்த பிரனேஷ் ஐந்து வயதிலிருந்தே செஸ் விளையாடி தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களை வென்றுள்ளார்.
12 வயதுக்குட்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பிரனேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 9 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்று சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 28வது வீரர் பிரனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.