மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
சடலம் சம்பவ இடத்தில் இருந்து இது வரை மீட்கப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் பதற்றம் - துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு samugammedia மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.சடலம் சம்பவ இடத்தில் இருந்து இது வரை மீட்கப்படவில்லை.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.