கிளிநொச்சி உதய நகர் மேற்கு பகுதியில் இன்றைய தினம்(27) அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு காரணங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என இதுவரை தெரியவரவில்லை.
அதேவேளை உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.