இன்று (26) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அரச நிறுவனங்களும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்தார்.
அதற்கான சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் ஏறக்குறைய 50% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், 61 மருத்துவப் பிரிவுகளில் அதிக டெங்கு அபாயம் காணப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.