ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கினாலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி, ஹாரிஸ்பத்துவ தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையபோகின்றீர்களா என பலரும் என்னிடம் கேட்கின்றனர். அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. எடுக்கபோவதும் இல்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் எமது பயணம் தொடரும். ” எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.