மின்கட்டணம் அதிகரித்துள்ளதால், தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஏற்றுமதிக்கான அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் நன்னீர் மற்றும் உப்பு நீர் அலங்கார மீன்கள் வாழும் தொட்டிகளுக்கு தொழில்துறையினர் செயற்கை ஒக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின்கட்டண உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மின்சாரக் கட்டணத்திற்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என அலங்கார மீன்களை வளர்க்கும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மின்கட்டண அதிகாரிப்பால் சிறு தொழில் முயற்சியாளர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அலங்கார மீன் வளர்ப்பாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி. samugammedia மின்கட்டணம் அதிகரித்துள்ளதால், தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஏற்றுமதிக்கான அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மேலும் நன்னீர் மற்றும் உப்பு நீர் அலங்கார மீன்கள் வாழும் தொட்டிகளுக்கு தொழில்துறையினர் செயற்கை ஒக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின்கட்டண உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மின்சாரக் கட்டணத்திற்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என அலங்கார மீன்களை வளர்க்கும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை மின்கட்டண அதிகாரிப்பால் சிறு தொழில் முயற்சியாளர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.