மொரட்டுவ – லுனாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்றை பிரதேசவாசிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்று (12) அதிகாலை 1 மணியளவில் குறித்த முதலை கடற்கரையில் இருந்து ரயில் பாதையை கடந்து சென்றது போன்ற கால் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
பிரதேசவாசிகளால் முதலை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவலளிக்கப்பட்ட போதும், இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.